பொலிசாரைத் தாக்கிய ஐ.தே.க எம்.பி பிணையில் விடுதலை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளையில் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்துஅவர் தனது சட்டத்தரணியூடாக பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜராகியதாக எமது செய்தியாளர் கூறினார்.

இந்நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது உத்தியோகத்தர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments