மும்மொழிக்கொள்கை கிடப்பிலாம்?


இலங்கை அமைச்சரான மனோ கணேசன் முதல் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் வரை மும்மொழிக்கொள்கை பற்றிய வாய் கிழிய கத்தியவாறே இருக்கின்ற போதும் கொழும்பு திருந்தியபாடாக இல்லை.

மத்திய அரசின் ஆயுள்வேதத் திணைக்களம் தனது பதவி ஆட்சேர்ப்பிற்கு தனிச் சிங்களத்தில் நேர்முகப் பரீட்சைக் கடிதங்களை இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்களிற்கு அனுப்பி வைத்துள்ளது.

எதிர்வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நேர்முகப் பரீட்சைக்கு இன்றைய தினம் தான் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் மட்டுமே ஒரு அரச வேலை நாள். அந்த ஒரு நாளிலேயே இதில் கேட்டகப்பட்டுள்ள ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும். அவகாசம் போதுமானதல்ல. மொழி தொடர்பான கொள்கை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திணைக்கள உயர் அதிகாரிகள் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் தொடர்பில் எள்ளளவும் அக்கறை கொள்ளவில்லையென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments