ஆழ்ந்துறங்கும் விடுதலைத்தீ அது?


தமிழ் தேசிய உணர்வும் அதன் பதிவுகளும் தமிழ் மக்களின் அடிமனதில் உறைந்திருக்கும் வரையில் விடுதலைக்கான தீ அணைந்து போகாதென்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

தமிழர் திருநாளை முன்னிட்டு வல்வை மண்ணில் நடந்த 'பட்டம் ஏற்றும்' போட்டியில் காணப்பட்ட பட்டங்களில் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்கள் தமிழீழ படைத்துறை சாதனங்களை நுட்பமாகக் காட்சிப்படுத்தியது மட்டுமல்ல, அங்கயற்கண்ணி, செய் அல்லது செத்து மடி , நிலம் எங்கள் உரிமை போன்ற வாசகங்களையும் வானுயர பட்டங்களில் பறக்க விட்டிருந்தார்கள்.

அதே கனவுகளுடன் விடுதலை நோக்கிய சிந்தனையுடன் மக்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.அவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக எத்தனையோ ஆய்வுகள்,முன் முடிவுகள் , அதையொட்டிய அரசியல் தீர்வுகள், முன் மொழிவுகள் வெளிவந்தன.

ஆனால் எல்லவற்றையும் ஒரு கணப் பொழுதில் கலைத்துப் போட்டு விடுகிறார்கள் மக்கள்.இது இனத்தின் அடங்காமையென அரசியல் ஆர்வலர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தடைகள் தாண்டி பறந்த வரிப்புலிகள் பட்டம் அதனையே சொல்லி நிற்கின்றது.

No comments