வவுனியாவில் இளைஞர்கள் அட்டகாசம்! காவல்துறையினரோ வர மறுப்பு!
வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் வீதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் வெடிகளைக் கொழுத்தி வீடுகளுக்குள் போட்டும் வீதியால் போய்வருவதற்கும் இடையூறாக இருந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மக்கள் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் மைதானத்திற்கு அருகே புத்தாண்டு நாளான இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடிய இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் குறித்து காவல்துறையினருக்கு வாய் வழி முறைப்பாடு செய்யப்பட்ட போதும் காவல்துறையினர் குறித்த இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் மைதானத்திற்கு அருகே புத்தாண்டு நாளான இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடிய இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் குறித்து காவல்துறையினருக்கு வாய் வழி முறைப்பாடு செய்யப்பட்ட போதும் காவல்துறையினர் குறித்த இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
#Vavuniya
Post a Comment