மீண்டும் ஒரே இனம்,ஒரே கொடியாம்?


இலங்கை அரசு புத்தாண்டில் தனது அரசு பணியாளர்களுடன் செய்து கொள்கின்ற கடமை சபதத்தில் சர்ச்சைக்குரிய ஓரே இனத்தின் ஒரே கொடியின் விவகாரத்தை இம்முறையும் மாற்றிக்கொள்ளவில்லை.இதன் மூலம் மீண்டுமொரு இந்நாடு சிங்கள பௌத்த நாடு என்பதை தனது பணியாளர்களிற்கும் அரசு வெளிப்படுத்தியிருப்பதாக தமிழ் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஓவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் இலங்கை ஜனாதிபதி அலுவலக ஆலோசனையின் பேரில் அரச அலுவலர்களிற்கு கடமை சபதமொன்றை செய்துகொள்வது வழமையாகும்.

ஆனாலும் கடந்த இரு ஆண்டுகளாக நல்லாட்சி அரசின் கீழ் முன்னெடுக்கப்படும் கடமை சபதத்தின் போது ஓரே இனத்தின் ஒரே கொடியின் கீழே என்ற கோசத்தையே இம்முறையும் வழமை போல இலங்கை அரசு அமுல்படுத்தியுள்ளது.

கடந்த இரு வருடங்களாக இதே பாணியில் கடமை சபதங்களை அரசு தும் அமுல்படுத்தி வருகின்ற நிலையில் விசனம் வெளியிடப்பட்ட போதும் அரசு கண்டுகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments