சக மீனவனின் சடலத்தை அடையாளங்காட்டிய நண்பர்கள்!


இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட சக மீனவரின் சடலத்தை தமிழக மீனவர்கள் அடையாளங்காட்டியுள்ளனர்.யாழ்.போதனா வைத்திய சாலையின பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ள தமிழக மீனவரின் சடலத்தையே சக மீனவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

இலங்கை கடற்பரப்பிற்குள் நேற்றைய தினம் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சமயம் ஒரு படகு முழுமையாக சேதமடைந்து நீரில் மூழ்கியுள்ளது. அதில் பயணித்த மீனவர்கள் 9 மீனவர்களும் கடலில் வீழ்ந்த நிலையில் 8பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைஅறிவித்திருந்தது. இதில் மாரிசாமி (வயது 57 )என்னும் முதியவர் காலையில் கடலில் மிதந்த நிலையில் கடற்படைநினரால் சடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
அவரது சடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்.போதனா வைத்திய சாலையின பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இலங்கை கடற்படை தம்மை தாக்கியதாக இந்திய மீனவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனாவைத்தியசாலையில் இன்றைய தினம் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களே  இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட சக மீனவரின் சடலத்தை அடையாளம் காட்டியிருந்தனர்.

No comments