தனிப்பட்ட கோபமே கொலையானதா?


பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தனிப்பட்ட பழிவாங்கல் சம்பவமென தெரியவந்துள்ளது. வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாசுதேவன் அமல்கரன் (அமல்) என்ற இளைஞர் மூன்று இனம் தெரியாத நபர்களினால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நண்பர்களுடன் உரையடிக்கொண்டிருந்த வேளை தொலைபேசி ஒன்று வந்தாகவும் அதனை பேசியவாறு சிறிது தூரம் சென்ற குறிந்த இளைஞர் மீது இனம் தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தம்பி சென்றுள்ளனர் எனவும் சம்பவவிடத்தில் இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியில் விற்பனை செய்யப்படும் உணவுகளை கொள்வனவு செய்ய முற்பட்ட சிலருடன் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணமென சொல்லப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments