காவல்துறையைப் பயன்படுத்தி சம்பந்தனை வெளியேற்றுங்கள்
மகிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்த பின்னரும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தைப் பயன்படுத்தி வரும் சம்பந்தனை, பொலிஸாரைப் பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும் என்று மகிந்தஅணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர் தடுமாறுகின்றார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சுமுக நிலமை ஏற்படுத்தவே மகிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்தாரா என்று எண்ணத் தோன்றுகின்றது.
தலைமை அமைச்சர் பதவி தொடர்பான நெருக்கடியின்போது சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டார்.
இந்த நிலமையே தற்போதும் தொடர்கின்றது. எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த அறிவிக்கப்பட்ட பின்னரும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் கூட்டமைப்பு வசமே காணப்படுகின்றது.
சபாநாயகர் பொறுப்பற்றுச் செயற்படுகின்றார். உடனடியாக பொலிஸாரைப் பயன்படுத்தி சம்பந்தனை வெளியேற்ற வேண்டும் என்றார்.
Post a Comment