மீண்டும் வந்தது கூட்டமைப்பின் கிராம எழுச்சி!


கூட்டமைப்பும் ஜக்கிய தேசியக்கட்சியும் அடுத்த தேர்தலிற்கு நம்பியிருக்கும் கிராம எழுச்சி திட்டத்தை உடனடியாக மீண்டும் அமுல்படுத்த ரணில் அமைச்சரவையில் இன்று இணக்கம் காணப்பட்டுள்ளது.முன்னதாக மகிந்த பிரதமரானதும் குறித்த திட்டம் உடனடியாக அமுலுக்கு வருகின்ற வகையில் இரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே அமைச்சர்களது பொறுப்புகள் மற்றும் திணைக்களங்களை உள்ளடக்கிய புதிய வர்த்தமானி ஒன்று எதிர்வரும் தினங்களில் வெளியாக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி இன்றைய அமைச்சரவையில் உறுதி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் புதிய அமைச்சரவை கூடியிருந்த நிலையிலேயே கிராம எழுச்சி திட்டத்தை உடனடியாக மீண்டும் அமுல்படுத்த ரணில் அமைச்சரவையில் இன்று இணக்கம் காணப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கில் அடுத்த தேர்தலினை இலக்காக வைத்து கிராம எழுச்சி திட்;டத்தின் கீழ் மக்களிற்கான சலுகை அரசியலை முன்னெடுத்துவருவதுடன் தமது பிரச்சாரங்களிற்கு அதனை பயன்படுத்துவதும்  குறிப்பிடத்தக்கது.  

No comments