இன்றிரவிலும் ரணில் அரசை கலைப்பேன்?


கூட்டமைப்பு நினைத்தால் நாடாளுமன்றத்தில் ரணில் அரசினை இன்றிரவுடன் கலைக்கமுடியுமென அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததை கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.அவ்வாறு தான சொல்லவில்லையென சுமந்திரன் தற்போது பின்வாங்கியுள்ள நிலையில் இன்று தமிழர் தரப்பின் ஏகோபித்த ஆதரவோடு பெரும்பான்மையைப்  பெற்று ஆட்சியமைத்திருந்தாலும் எந்நேரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அந்த  ஆட்சியைக் கவிழ்க்கலாம். இலங்கையின் அரசியல் துவாரத்தை சர்வதேச சமூகத்திற்கு ஒரே இரவில் காட்டிக் கொடுக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தைப் பெறலாம் என சுமந்திரன் தெரிவித்ததாக அது தெரிவித்துள்ளது.

ஆனால், சிங்கள மக்களுக்கு தமிழர் தரப்பின் மீது நம்பிக்கைய ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் வேலை செய்துகொண்டு, பையிலிருக்கும் கத்தியை எடுத்து அடிக்கடி வெளியே காட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அவநம்பிக்கையோடும் அச்சத்துடனும்தான் பார்த்துக் கொண்டிருப்பர். ஆக, எங்களிடமுள்ள பலத்தையே பலவீனமாகவும் முன்னிறுத்திவிடக்கூடாது” என்றும் சுமந்திரன் எம்.பி. கூறியதாக அது தெரிவித்துள்ளது.

No comments