பாடசாலை மாணவனை காணோம்?

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயிருப்பதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உதயகுமார் பிரியன் (வயது 12) எனும் மாணவனே காணாமல் போயுள்ளான்.

யாழ்.நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர் விடுதியில் இருந்து நேற்று புதன்கிழமை முதல் பாடசாலை மாணவனை காணவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் விஸ்வமடு தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் குறித்த விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments