பொங்குதமிழ் பிரகடனத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது





யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு நாள் நேற்று வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடண நிறைவு நாளை கடைப்பிடித்தனர்.

இலங்கை அரசின் முப்படைகளின் அடக்குமுறைகள் முழுமையாக யாழ்.பல்கலைக்கழகத்தினை முற்றுகையிட்டிருந்த நிலையிலும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் 2001 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் என்னும் மாபெரும் எழுச்சி நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் வேணவாக்களான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடணமாக வலியுறுத்தப்பட்டது.

No comments