இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் விபரம் திரட்ட நடவடிக்கை
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு பன்னாட்டு அரச சார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும், மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விவரங்களை வழங்க வேண்டும் என்று இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஆகக் குறைந்து இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான அமைப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இறுதிப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக்கிடுவதற்கு இந்த எண்ணிக்கை முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள அவர் நினைவுகூருவதற்கும் இது அவசியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் உள் நாட்டுப் போர் முடிவடைந்து ஒரு தசாப்த காலத்தின் பின்னரும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்னவென்பது எவருக்கும் தெரியாது என குறிப்பிட்டுள்ள இரு அமைப்புகளும் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தெரியாத நிலை காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
கொல்லப்பட்டவர்களின் இறுதி எண்ணிக்கையை கணிப்பிடுவதற்கு புள்ளி விபர அணுகுமுறையை பயன்படுத்துவதே இதன் நோக்கம் என்றும், 2009 மே மாதம் 18-19 திகதிகளில் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டது எனவும் இரு சர்வதேச அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை உறுதிசெய்வதற்காக உலகம் முழுதுமுள்ள தமிழர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் உறவினர்கள் அயலவர்களுடன் உரையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் எனமனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவின் தலைவர் பட்ரிக் போல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல அமைப்புகள் ஏற்கனவே இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன,எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பெயர்களை பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும், மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விவரங்களை வழங்க வேண்டும் என்று இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஆகக் குறைந்து இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான அமைப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இறுதிப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக்கிடுவதற்கு இந்த எண்ணிக்கை முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள அவர் நினைவுகூருவதற்கும் இது அவசியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் உள் நாட்டுப் போர் முடிவடைந்து ஒரு தசாப்த காலத்தின் பின்னரும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்னவென்பது எவருக்கும் தெரியாது என குறிப்பிட்டுள்ள இரு அமைப்புகளும் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தெரியாத நிலை காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
கொல்லப்பட்டவர்களின் இறுதி எண்ணிக்கையை கணிப்பிடுவதற்கு புள்ளி விபர அணுகுமுறையை பயன்படுத்துவதே இதன் நோக்கம் என்றும், 2009 மே மாதம் 18-19 திகதிகளில் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டது எனவும் இரு சர்வதேச அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை உறுதிசெய்வதற்காக உலகம் முழுதுமுள்ள தமிழர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் உறவினர்கள் அயலவர்களுடன் உரையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் எனமனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவின் தலைவர் பட்ரிக் போல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல அமைப்புகள் ஏற்கனவே இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன,எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பெயர்களை பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment