இந்திய மீனவர்கள் நால்வர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வரை காரைநகர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கபட்டுள்ளனர்.

அவர்களை யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்னர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று இரவும் கைது செய்யப்பட்டனர்.

No comments