மன்னாரில் மோசடியாய் நிதிதிரட்டிய சிங்கள இளைஞர்கள் நையப்புடைப்பு

ஆதரவற்ற சிறுவர்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி, சில தமிழ் மக்களை மிரட்டியும் நிதி வசூலித்த சிங்கள இளைஞர்கள் நால்வர் மீது, சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து அவர்களை நையப்புடைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்துள்ளது.
இது தொடர்பாக மடுப் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த பொலிஸார் அவர்களைக் காப்பாற்றும் விதமாக செயற்பட்டதுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments