யாழ்.செல்கிறார் ராகவன்:காவடியெடுக்க தயாராக டாண்?


நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அலுவலக கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் யாழ்ப்பாணம் வருகை தரவள்ளார்.

இதனிடையே முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயுடன் அலைந்து திரிந்த கும்பலொன்று தற்போது புதிய ஆளுநருக்கு காவடி தூக்க தயாராகிக்கொண்டிருப்பதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சுரேன் ராகவன் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதோடு தனது அலுவலக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுநரை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நீண்டநாட்களாக அனுமதிப்பத்திரமின்றி யாழிலிருந்து செயற்படும் டாண் தொலைக்காட்சி முன்னர் ரெஜினோல்ட் கூரேயுடன் சொந்தம் கொண்டாடி அவரை வீட்டிற்கு அனுப்பியிருந்தது.எவ்வாறேனும் தனது அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்ள  அலைந்து பறக்கின்ற கோத்தபாயவின் பினாமி தொலைக்காட்சி  தற்போது சுமந்திரனின் ஆஸ்தான ஊதுகுழலாகியுள்ளது.

இந்நிலையில் மைத்திரியுடன் நெருக்கத்தை பேண தற்போது முன்னைய ஆளுநருக்கு காவடி எடுத்தமை போன்று புதிய ஆளுநருக்கான காவடியுடன் டாண் தொலைக்காட்சி புறப்பட்டுள்ளது.

No comments