பழைய வீதிகளுக்கு நாடாவெட்டும் யாழ் மாநகரசபை




 தாரிடப்பட்டுவரும் பழைய வீதிகளுக்கு நாடா வெட்டித் திறப்புவிழாச் செய்யும் புதிய கலாச்சாரத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆளுந்தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுவருகின்றமை மக்கள் மத்தியில் நகைப்பினை உருவாகக்கியுள்ளது.

மக்கள் மத்தியில் செல்வாக்கினைக் காட்டுகின்றோம் எனும் தோரணையில் செப்பனிடப்பட்டு தார் ஊற்றப்படுகின்ற வீதிகளுக்கு பணி ஆரம்பிக்க முன் மக்களை அழைத்து நிறைகுடம் வைத்து விழா எடுத்துவரும் யாழ் மாநகர ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வீதி புனரமைக்கப்பட்டதும் வீதிக்குக் குறுக்காக நாடா கட்டி வாழை தோரணம், பலூண் உள்ளிட்டவை கட்டி புதிய வீதியினைத் திறப்பதுபோல நாடா வெட்டி திறந்துவைத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.



அவ்வகையில் இன்று யாழ் நகரப்பகுதியில் தாரிடப்பட்ட பழைய வீதிகளை யாழ் மாநகர துணை முதல்வர் ஈசன் நாடா வெட்டி மீள திறந்துவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments