முல்லையில் கரையொதுங்கிய இந்திய படகு?


முல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய மீன்பிடி படகானது, இந்தியாவுக்குரியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்தினம் (30) முல்லைத்தீவு கடற்கரையில், சேதமடைந்த நிலையில் கரையொதுங்கிய  இப்படகு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படகானது இந்தியா – ஆந்திரா மாநிலத்துக்குரிய மீனவப்படகென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த படகிலிருந்து அலைப்பேசிகள் மற்றும் மீனவத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு குறித்த படகானது, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருக்கும் வேளையில் விபத்துக்குள்ளாகியிருக்கலாமென்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு, இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments