பெப்ரவரி வெளியே வருகின்றார் ஞானசாரர்?


சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நம்பத்தகுந்த வட்டாரங்களின் அடிப்படையில் உறுதியாகவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
சுதந்திர தின கைதிகள் விடுதலையின் போது ஞானசார தேரருக்கும் விடுதலை வழங்கப்படவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரருடைய தாய் தனிப்பட்ட முறையில் தேரரின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மகாசங்கத்தினரும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி இந்த கோரிக்கைகளை புறந்தள்ள மாட்டார் என்ற நம்பிக்கை தம்மிடம் உள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

No comments