காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரது தாயாரும் பிரிந்தார்!

இலங்கைப்படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரனின் தாயாரும் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

கலிகை சந்தி இராணுவ முகாமில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட தமது மகனான இராமச்சந்திரனை தேடியே அலைந்து திரிந்து தாம் சாவதற்குள் மகனை கண்டுவிட வேண்டும் என்றிருந்தவர்கள் மகனைக் காணாமலேயே மண்ணிலிருந்து பிரிந்துள்ளார்கள்.

இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் இறந்து ஒரு மாதமே கழிந்துள்ள  நிலையில் தாயாரான சுப்பிரமணியம் அம்பிகையும் மண்ணிலிருந்து பிரிந்துள்ளார்.

அன்னாரது பிரிவற்கு யாழ்.ஊடக அமையம் தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டுள்ளது

No comments