இலங்கை அரசு கால அவகாசம் கோரும் ஆண்டாக 2019?


மீண்டும் இலங்கை அரசு கால அவகாசங்களை கோருகின்ற ஆண்டாக 2019ம் ஆண்டு மலருமாவென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் பல எதிர்பார்ப்புக்களுடன் 2019ம் ஆண்டு பிறக்கின்றது. மக்கள் தமது ஜனாதிபதி, மாகாண, பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆண்டாக இவ் வாண்டு இருக்கப்போகின்றது. அத்துடன் இலங்கை நாடானது சர்வதேசத்திற்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இது வரையில் என்ன செய்துள்ளது என்பது பற்றி ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுமிருக்கும். 

2018 டிசெம்பர் 31க்கு முன்னர் எமது மக்களின் காணிகளைத் திருப்பிக் கொடுக்க ஜனாதிபதியால் ஆணையிடப்பட்டிருந்தும் படையினரால் தவணை கோரப்பட்டுள்ளது. அதே போல் ஜெனிவாவிலுந் தவணை கேட்கப்படலாம். எமது பிரச்சனைகளைத் தாக்காட்டி, தாமதித்து, தீர்வு ஏதும் தராது, தமக்கேற்ற தீர்வுகளை எம்மேல் திணிக்க வைக்க அரசாங்கங்கள் எதிர்பார்த்திருக்கும் ஆண்டாகவும் இது அமையலாம். 

எது எவ்வாறிருப்பினும் இந் நாட்டு மக்கள் தம்முள் ஐக்கியத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தி நிறைவுடன் பயணிக்கும் ஒரு ஆண்டாக 2019 அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேனென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments