கொழும்பு சென்ற தமிழ் இளைஞனைக் காணவில்லை!

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி கற்ற பாலிநகர்  வவுனிக்குளத்தை சேர்ந்த இளைஞர்  கொழும்புக்கு சென்ற இடத்தில் காணாமல் போயிருப்பதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறையிடப்பட்டுள்ளது.

மேற்படி விபரத்தை உடைய இளைஞன் கடந்த 31 ஆம் திகதி இரவு 7மணியளவில் கொழும்புக்கு செல்வதாக சென்ற இடத்தில் காணாமல் போயுள்ளதாகவும் அவரது கைதொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு  தகவல்களை தருமாறு அவரது பெற்றோர், உறவினர்கள் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments