வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
வவுனியா மடுகந்த காவல்துறைப் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
மடுகந்த, மயிலங்குளம் பகுதியில் குளத்துடன் காணப்படும் வயல் கிணறு ஒன்றிலிருந்து மாடு மேய்ப்பதற்குச் சென்ற இளைஞர் ஒருவரே உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றினை அவதானித்துடன் காவல்துறைக்கு தகவல் வழக்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மடுகந்த பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் 45 தொடக்கம் 55 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மடுகந்த, மயிலங்குளம் பகுதியில் குளத்துடன் காணப்படும் வயல் கிணறு ஒன்றிலிருந்து மாடு மேய்ப்பதற்குச் சென்ற இளைஞர் ஒருவரே உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலம் ஒன்றினை அவதானித்துடன் காவல்துறைக்கு தகவல் வழக்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மடுகந்த பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் 45 தொடக்கம் 55 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment