அரசியல் நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் - வெளிநாட்டுத் தூதுவர்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக, இலங்கை அரசுக்கு உரிய அழுத்தங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளனர்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மோசமான அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே கொழும்பிலுள்ள 15 தூதரகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இரா. சம்பந்தனிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, இத்தாலி, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், தென்கொரியா, பெல்ஜியம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தூதுவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
#TNA
நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மோசமான அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே கொழும்பிலுள்ள 15 தூதரகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இரா. சம்பந்தனிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, இத்தாலி, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், தென்கொரியா, பெல்ஜியம், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தூதுவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
#TNA
Post a Comment