இந்திய படுகொலை: கிழக்கிலும் நினைவுகூரல்!


களுவாஞ்சிக்குடியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 14 பொதுமக்களின் நினைவு நாள் நேற்;று நினைவுகூரப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடியில் 1987ஆம் ஆண்டு இதேநாளில், இந்திய இராவணுவ சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் புதல்வரான சக்கரவர்த்தி உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அவர்களினை நினைவுகூர்ந்தே நேற்றைய தினம் அஞ்சலிக்கப்பட்டுள்ளது

No comments