மைத்திரி -ஜநா பொதுசெயலாளர் பேச்சு!
ஐநா பொது செயலர் , ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேனாவுடன் இன்று தொலைபேசியில் உரையாடியதாக ஜக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.இலங்கையில் ஜனநாயகம் ,சட்டத்தின் ஆட்சி ,அரசியலமைப்புக்கு மதிப்புக்கொடுக்குமாறு அப்போது கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிக்கு மேற்குலகு முதல் இந்தியா என பலதரப்புக்களும் அழுத்தங்களை கொடுத்துவருகின்றன.தற்போது அவற்றுடன் ஐநாவும் இணைந்துள்ளது.
இதனிடையே சீன அரசை தொடர்ந்து பாகிஸ்தான் தூதரும் மைத்திரியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment