நடுநிலையினை நிராகரித்த கூட்டமைப்பு
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக் கையில்லாத்
தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நடுநிலமை வகிக்கவேண் டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன
கோரிக்கை முன்வைத்துள்ளார். இருப்பினும், கூட்டமைப்பு அந்தக்
கோரிக்கையை அடியோடு நிராகரித்துள்ளதுடன், தமது கட்சி
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை ஏற்கனவே
எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
மைத்திரிபால
சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,
செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோருக்கும் இடையில்
அரச தலைவர் செயலகத்தில் நேற்று ஒன்றரை மணிநேரம் சந்திப்பு
இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு
செய்யப்பட்டேன் என்பதில் தொடங்கி, தலைமை அமைச்சர் ரணில்
விக்கிரமசிங்கவை பதவி நீக்கியமை வரையிலான விடயங்களைக்
குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் தற்போதைய அரசியல்
குழப்பங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு
எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு
நடுநிலமை வகிக்கவேண்டும் என்று கோரிக்கை
விடுத்துள்ளார்.
ஆனால் கூட்டமைப்பு அதனை நிராகரித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள
நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குவது என்று கட்சி
முடிவு எடுத்து அறிவித்துள்ளமையை சுட்டிக்காட்டினர். மகிந்த ராஜபக்சவை கூட்டமைப்பு ஆதரிக்க
முடியாதிருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாக இதன்போது
கூறியுள்ளார்.
Post a Comment