நடுநிலையினை நிராகரித்த கூட்டமைப்பு


மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக் கை­யில்­லாத் தீர்­மா­னம் மீதான வாக்­கெ­டுப்­பின்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நடு­நி­லமை வகிக்­க­வேண் டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரிக்கை முன்­வைத்­துள்­ளார். இருப்­பி­னும், கூட்­ட­மைப்பு அந்­தக் கோரிக்­கையை அடி­யோடு நிரா­க­ரித்­துள்­ள­து­டன், தமது கட்சி நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிக்­கும் முடிவை ஏற்­க­னவே எடுத்­துள்­ள­தா­க­வும் கூறி­யுள்­ளது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­தி­ரன், செல்வம் அடைக்­க­ல­நா­தன், த.சித்­தார்த்­தன் ஆகி­யோ­ருக்­கும் இடை­யில் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று ஒன்­றரை மணி­நே­ரம் சந்­திப்பு இடம்­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­பின் ஆரம்­பத்­தில்  மைத்­தி­ரி­பால சிறி­சேன கருத்­துத் தெரி­வித்­துள்­ளார். 2015ஆம் ஆண்டு  தேர்­த­லில் தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­டேன் என்­ப­தில் தொடங்கி, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி நீக்­கி­யமை வரை­யி­லான விட­யங்­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதன் பின்­னர் தற்­போ­தைய அர­சி­யல் குழப்­பங்­கள் தொடர்­பில் இரு தரப்­பி­ன­ரும் ஆராய்ந்­துள்­ள­னர். நாடா­ளு­மன்­றத்­தில் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தத் தீர்­மா­னம் மீதான வாக்­கெ­டுப்­பின்­போது கூட்­ட­மைப்பு நடு­நி­லமை வகிக்­க­வேண்­டும் என்று  கோரிக்கை விடுத்­துள்­ளார்.

ஆனால் கூட்­ட­மைப்பு அதனை நிரா­க­ரித்­துள்­ளது. மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­கச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்று கட்சி முடிவு எடுத்து அறி­வித்­துள்­ள­மையை சுட்­டிக்­காட்­டி­னர். மகிந்த ராஜ­பக்­சவை கூட்­ட­மைப்பு ஆத­ரிக்க முடி­யா­தி­ருப்­பதை தான் ஏற்­றுக் கொள்­வ­தாக இதன்­போது கூறி­யுள்­ளார்.

No comments