ஜனாதிபதி இல்லமலேயே நாடாளுமன்றை கூட்ட முடிவு

இன்று நடக்கவுள்ள   நாடாளுமன்ற அமர்வில்  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கமாட்டார் என்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், அறிவிக்கப்பட்டதாக, ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலை நாடாளுமன்ற பெரும்பான்மை மூலம் தீர்மானிப்பது என்றும் இன்று காலை நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முடிவுக்கு வந்திருப்பதாக, சபாநாயகர் செயலகம்  சற்று முன் அறிவித்துள்ளது.  சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராயப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை இன்றைய சபை அமர்வில் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments