நாடாளுமன்றில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் - சபாநாயகர் சுற்றிவளைக்கப்பட்டார்

சபாநாயகர் ஆசனத்தை ஆளுங்கட்சியினர் சுற்றி வளைத்ததால் சபையில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.

பிரதமர் மஹிந்த அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிராக வாக்கெடுப்பை நடத்துமாறு, லக்ஸ்மன் கிரியெல்ல கோரியதையடுத்து, ச​பையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஆசனத்துக்கு அருகில் சென்றதும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக சபாநாயகரை சுற்றி வளைத்தனர்.

இந்நிலையில் சபாநாயகர் சபையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

No comments