விலைபோகமாட்டேன் என்கிறார் - தமிழ்க் கூட்டமைப்பின் கோடீஸ்வரன்


“பல கோடி ரூபாவுக்காக அம்பாறை மாவட்ட தமிழர்களை நான் ஒருபோதும் விற்க மாட்டேன். மஹிந்தவிடம் சரணாகதி அடையவும் மாட்டேன். தன்மானமுள்ள தமிழன் நான். அறப்போர் அரிய நாயகத்தின் பரம்பரையில் வந்த வாரிசு என்பதனை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

“மஹிந்த பக்கம் நான் தாவப் போகின்றேன் என்று பல ஊடகங்கள் வாயிலாகவும் முகநூல் வாயிலாகவும் வரும் வதந்திகளை நம்பவேண்டாம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments