சிவாஜிலிங்கத்தின் சுடரேற்றல் ஆரம்பம்!



நேற்று வல்வெட்டித்துறையில் தனித்து கேக் வெட்டி கைதாகி விடுதலையான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று சளைக்காது இன்று சுடரேற்றி அஞ்சலித்துவருகின்றார்.

முன்னதாக நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனுனின் நினைவிடத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் சுடரேற்றி அஞ்சலித்த கே.சிவாஜிலிங்கம் பின்னர் காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாகவும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மாவீரர் துயிலுமில்லம் முன்பதாக குவிந்திருந்த படையினர் மற்றும் காவல்துறையினர் வேடிக்கை பார்க்க தனது ஆதரவாளர்கள் சகிதம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

No comments