போர் செய்யாமல், குருதி சிந்தாமல் தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன - வடக்கு முதலமைச்சர்

சிங்­கள அர­சி­யல் தலை­மை­கள் வட­கி­ழக்­கைத் தம்­வ­சம்­ப­டுத்­தும் பல திட்­டங்­க­ளைத் தீட்­டி­யுள்­ளார்­கள். அதே சந்­தர்ப்­பத்­தில் இதற்­குச் சமாந்த­ர­மாக சந்­தடி எது­வு­மின்றி அந்த அர­சி­யல் முன்­னெ­டுப்­புக்­களை நிறை­வேற்­று­கின்ற குழுக்­க­ளாக வேறு குழுக்­கள் இயங்­கிக் கொண்டிருக்­கின்­றன.

உதா­ர­ண­மாக ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன அரச தலை­வ­ராக வீற்­றி­ருந்த காலத்­தில் உள்­நாட்­டுப் போர் வலுப்­பெற்று எல்­லைப்­பு­றக் கிரா­மங்­க­ளில் இனங்­க­ளுக்­கி­டையே போர் நடை­பெற்ற காலத்­தில் ஜே.ஆரின் மகனான­ரவி ஜெய­வர்த்­தன இந்த நிறை­வேற்­றுக் குழு­வொன்­றிற்­குத் தலைமை தாங்­கி­னார்.

வவு­னி­யா­விற்கு அப்­பால் உள்ள பம்­பை­மடு, ஈரற்­பெ­ரிய குளம் போன்ற பகு­தி­க­ளில் தென்­ப­கு­தி­யில் இருந்து சிங்­கள மக்­களை கொண்­டு­வந்து குடி­யேற்­றி­யது மட்­டு­மன்றி அவர்­க­ளுக்கு துப்­பாக்­கிச் சுடும் பயிற்சி மற்றும் இன்­னோ­ரன்ன இரா­ணு­வப் பயிற்­சி­களை வழங்கி அவர்­களை அங்கு குடி­யேற்­றி­னார்.

ரவி ஜெய­வர்த்­தன அர­சி­யல் மேடை­க­ளில் காட்­சி­ய­ளிக்­காத போதும் இந்த நிறை­வேற்று கட­மை­களை திறம்­பட ஆற்­றி­னார். எனக்கு மூத்தவராக என் கல்­லூ­ரி­யில் கற்ற அவர் ‘ரைஃபிள் க்ளப்’ என்ற எமது சங்­கம் ஒன்­றில் சேர்ந்து சூட்­டுப் பயிற்சி பெற்று மாண­வ­னாக இருந்த காலத்­தில் துப்­பாக்கி சுடு­வ­தில் பத்­துக்­குப் பத்து என்ற கணக்­கில் இலக்­கு­களை சுட்டு வீழ்த்­தக் கூடி­ய­வ­ராக இருந்­தார் என்று குறிப்­பிட்ட முத­ல­மைச்­சர், இலங்­கை­யின் தமிழ்ப் பகு­தி­க­ளில் சிங்­கள அரசுகளினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வந்த இன அழிப்பு அல்­லது இனச் சுத்­தி­க­ரிப்­புப் பற்றி உலக நாடு­கள் பல­வும் அறிந்­தி­ருக்­கின்­றன.

ஆனால் தற்­போது எது­வித ஆர­வா­ரங்­க­ளு­மின்றி துப்­பாக்கி முழக்­கங்­கள் இன்றி, குருதி சிந்­தா­மல், பச்­சைப் போர் என்ற பெய­ரால் எமது தமிழ்ப் பிர­தே­சங்­கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்கு சூழல் அரசியல் என்ற மாயைச் சொல்லை பயன்­ப­டுத்தி உலக நாடு­களை நம்பச் செய்­கின்ற கன­கச்­சி­த­மான செயற்­பா­டு­கள் இன்று நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன என்­றார்.

No comments