அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வவுனியாவில் உணவுத்தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் இப்போராட்டம் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாகஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கவனயீர்ப்புப் போராட்டம் மாலை 5.30 மணியளவில் நிறைவுக்கு வருகிறது.

வவுனியா மாவட்ட பொதுஅமைப்புகளின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்
அரசியல் கட்சிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தங்களது ஆதரவு தெரிவித்துள்ளனர்.







No comments