மட்டு மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம்!

கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்ப கட்ட துயிலுமில்லங்களின் துப்பரவு செய்யும் பணிகள் நேற்று 16 ஆம் திகதி மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் நடைபெற்றது.

மாவடிமுன்மாரி பனிச்சையடிமுன்மாரி ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் குடும்பங்களின் பெற்றோர்கள் தேசத்தின் வேர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியுள்ளன என அறிவித்துள்ளனர்.




No comments