மண்பறித்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்! வவுனியாவில் சம்பவம்

டிப்பர் வாகனத்தில் மணல் பறித்துக் கொண்டிருந்த ஒருவர் டிப்பரின் பெட்டியை உயர்த்தும் போது அருகில் இருந்த மின்கம்பத்தில் டிப்பரின் பகுதி தொடுகையுற்றமையால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் வவுனியா சுந்தரபுரம் மணிபுரம் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான செட்டிகுளம் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் ஜெகதீஸ்வரன் (ரமேஷ்) 43 வயது என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments