தமிழரசு கட்சியை புறந்தள்ளி அரசியல் செய்யும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்!

வவுனியா கற்குளம் பகுதியைச்சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி அவர்கள் சடலமாக திருகோணமலையில் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டது சகல்ரும் அறிந்த விடயமே  இவருடைய மரணம் மர்மமாக இருப்பதால் பொலிஸார் பல முனைகளில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகிறார்கள்

அதற்க்கு முழு ஆதரவையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் பொலிஸாருக்கு வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை போதநாயகியின் குடும்பத்தார் போதநாயகியின் இறப்புக்கு அவரது கணவரான வன்னியூரான் செந்தூரனே காரணம் என குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில்

போதநாயகியின் மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த ஒரு கூட்டமே படையெடுத்து நிற்க்கின்றனர் என்பது தான் மிகுந்த வேதனைக்குறிய விடயமாகும்,போதநாயகியின் குடும்ப வறுமை, குறித்த குடும்பத்தினர் வாழும் பின் தங்கிய கிராமத்தின் சூழல்,விவரம் அறியாத அப்பாவி மக்களை வைத்து அரசியல் இலாபம் காண பலர் படையெடுத்துள்ள நிலையில் புதிய வரவாக, இனாமாக வடமாகாணசபைக்கு உறுப்பினராக சென்ற தமிழரசு கட்சியின் உறுப்பினர் அஸ்மின் அவர்களும் களத்தில் குதித்ததுதான் இங்கு பெரும் புதினமாக உள்ளது

நேற்றைய தினம் வவுனியா கற்குளம் கிராமத்தில் உள்ள போதநாயகியின் இல்லத்திற்க்கு அஸ்மின் அவர்கள் சென்று குடும்பத்தாரை சந்தித்ததுடன் கிராம மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர் இதேவேளை இக்கிராம மக்களை சிலர் தவறான வழிநடத்தலில் கொண்டு செல்கிறார்கள் என்பது அங்கிருந்து வரும் சில தகவல்கள் மூலம் எமக்கு அறிய முடிகிறது

அஸ்மின் அவர்கள் அங்கு சென்று திரும்ப்பிய பின் எமது இணைய சேவைக்கு தொடர்பு கொண்ட அக்கிராமத்தை சேர்ந்த சிலர் ’’அஸ்மின் அங்கு வருவது தமக்கு தெரியாது என்றும் ஏதோ பெண்கள் அமைப்பு ஒன்றே வருவதாக அஸ்மினை அழைத்து வந்தவர்கள் முன்கூட்டி எமக்கு தெரியப்படுத்தினர் என்றும் ஆனால் இறுதியில் அஸ்மின் அவர்கள் வந்தார் எனவும் எமக்கு அது பிடிக்கவில்லை எமது பிள்ளை போதநாயகியின் இறப்பை வைத்து யாரும் அரசியல் பிழைப்பு நடத்த தேவையில்லை எமது போதநாயகிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் திருகோணமலை பொலிஸார் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தினரும் நிச்சயமாக அவளின் மரணத்திற்க்கு நீதி பெற்றுக்கொடுப்பார்கள் என நம்பிக்கை உண்டு எனவே இங்கு அவளின் பெயரைக்கூறி எந்த அரசியல் வாதிகளும் பிழைப்பு நடாத்த தேவையில்லை என அக்கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்


இதேவேளை அஸ்மின் அவர்கள் வவுனியாவில் சந்திப்பை நடாத்தியது வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான வைத்தியகலாநிதி சத்தியலிங்கம் அவர்கட்கும் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments