யாழ் பல்கலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபவனி ஆரம்பமானது

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுத் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் முடிவிலேயே நடைபவனிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக  இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய நடைபவனி கிளிநொச்சி – வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.




No comments