அனுராதபுரத்தில் அம்பலமான இனவாத முகம் - வெள்ளையடிக்கிறது சுமந்திரன் தரப்பு


அனுராதபுரத்தில் நேற்று சில சிங்கள இளைஞர்கள் இனவாதத் தன்மையுடன் நடந்துகொண்டதை ஊடகவியலாளர்கள் முறியடித்ததோடு சிங்களவர்களின் காட்டுமிரண்டித்தனமான இனவா முகத்தை அம்பலப்படுத்தியநிலையில் சிங்களவர்கள் இனவாதிகள் இல்லை என வெள்ளையடிக்கும் நடவடிக்கையினை தமிழரசுக் கட்சி ஆரம்பித்துள்ளது.

தமிழரசுக் கட்சிக்காக எழுதும் அரச ஊடகவியலாளர்களை தன்வசப்படுத்திவைத்திருக்கும் சுமந்திரன் அவர்களின் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதிகளுக்கு வெள்ளையடிக்கும் நடவடிக்கையினை முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு நடவடிக்கையாக நேற்று சிங்கள இனவாத முகத்தை அம்பலப்படுத்திய வீடியோக்களை வெளியிட்ட சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக சிங்களவர்கள் நேற்று நடந்துகொண்டதை நியாயப்படுத்தும் கருத்துக்களை பகிர்ந்துவருவதையும் பல்கலைக்கழக மாணவர்களை கொச்சைப்படுத்தும் கைங்கரியத்தையும் முடக்கிவிட்டுள்ளனர்.



சிங்கள இனவாாதத்தை நியாயப்படுத்தும் அவ்வாறான சமூக வலைத்தளப் பதிவுகளை சுமந்திரனின் சிஸ்யர்களான அஸ்மின், சயந்தன், சுகிர்தன் உள்ளிட்டோர் பகிர்ந்துவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

No comments