டென்மார்க்கில் நினைவேந்தப்பட்ட 2ம் லெப்.மாலதியின் 31ஆம் ஆண்டு!

டென்மார்க்கில் 2ம் லெப்.மாலதியின் 31ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நேற்று சனிக்கிழமை டென்மார்க் கேர்ணிங் நகரில் ''விழித்தெழுவோம்'' என்ற தொனிப்பொருளில் இவ்வீரவணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளும் நினைவுகூரப்பட்டனர்.

நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன்ஆரம்பமானது. 2ம் லெப் .மாலதி, லெப்.கேணல் குமரப்பா,புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
 தொடர்ந்து அந்த மாவீரர்களுக்கு மக்களால் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் எழுச்சி கானங்கள் கவிதைகள், உரைகள், எழுச்சி நடனங்கள், தாயக மக்களின்அவலங்களை எடுத்துரைக்கும் நாடகங்கள் என்பன இடம்பெற்றன.

டென்மார்க் மகளிர் அமைப்பினரால் தமிழீழப்பெண்கள் எழுச்சிநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்றபாடலுடனும் தமிழர்களின் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.



No comments