அக்காச்சி அனந்தி எந்த கட்சி: இன்றும் குடிமிப்பிடி!

வடமாகாண அமைச்சர் அனந்தி தற்போது எந்த கட்சியென்பதில் இன்றைய இறுதி அமர்விலும் குடிமிப்பிடியில் உறுப்பினர்கள் ஈடுபட்டமையால் சபை அல்லோகல்லப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று கைதடியிலுள்ள பேரவையில் அவையின் கடைசி அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், முதலாவது அவை 2013 ஒக்ரோபர் 25ஆம் நாள் கூடியது. அதன்படி, அவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடியவுள்ளது.
அதேவேளை, வடக்கு மாகாண சபையின் முதலாவது அவையின் இறுதி அமர்வு  கைதடியில் உள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த அமர்வு சம்பிரதாய ரீதியான- விடைபெறும் அமர்வாக இருக்கும் என்றும், சபையில் தீர்மானங்கள் எதுவும் முன்வைக்கப்படாது எனவும், விவாதங்கள் நடத்தப்படாது என்றும் அவைத் தலைவர் தெரிவித்திருந்தார்.
எனினும் தமிழரசுக்கட்சி கும்பல் இறுதி நாளான இன்றும் குழப்பங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அமைச்சராக இருந்த அனந்தி தற்போது தனிக்கட்சி அறிவிப்பினை விடுத்துள்ளார்.இந்நிலையில் அவர் தமிழரசுக்கட்சியிலிருந்து தானாக விலகி;க்கொண்டுள்ளதாக தமிழரசு;ககட்சியின் செயலாளர் அறிவித்துமுள்ளார்.இந்நிலையில் இன்றைய அமர்வில் அவர் கலந்து கொண்ட நிலையில் அவர் தற்போது எந்த கட்சி சார்ந்த உறுப்பினர் என்பதை வெளிப்படுத்த கோரியே சயந்தன்  உள்ளிட்ட தமிழரசு கும்பல் குழப்பத்திலீடுபட்டது.

அனந்தி தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவானதுடன் அக்கட்சி வழியேயே அமைச்சர் பதவியிலுமுள்ளார்.இதனையே தமிழரசு கும்பல் கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

மாகாணசபையின் இறுதி அமர்வினை விவாதங்கள் நடத்தப்படாது அமைதியாக நடத்தப்படுமென அவைத் தலைவர் தெரிவித்திருந்த நிலையில் அவர் வேடிக்கை பார்த்திருக்க தமிழரசு கும்பல் குழப்பத்திலீடுபட்டிருந்தது.

No comments