தயாராகின்றார் முதலமைச்சர்?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது அடுத்த பயணத்திற்கு முன்னதாக தற்போதைய பதவியிலிருந்து கௌரவமாக விலகி வெளியே சென்று திரும்பும் அனைத்து நடவடிக்கைகளிலும் மும்முரமாகியுள்ளார்.
அவ்வகையில் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வதிவிடத்திலிருந்து வெளியேறுவதுடன் தனக்கென வழங்கப்பட்ட அரச சொத்துக்களை கையளிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.ஏற்கனவே தனக்கு கிடைக்கப்பெற்றிருந்த அனைத்து நினைவு பரிசில்களையும் அவர் தனது அமைச்சிடம் கையளித்துவிட்டார்.தற்போது தனக்கென பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட தளபாடங்கள் உள்ளிட்ட வதிவிடப்பொருட்களை பொறுப்பேற்க முதலமைச்சர் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.

இதனிடையே 22ம் திகதி வடமாகாணசபையிலுள்ள அனைத்து மட்ட அதிகாரிகளையும் அவர் சந்திக்கின்றார்.தனது அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விருந்துபசாரமொன்றையும் வழங்க திட்டமிட்டுள்ளார்.
இதன் பின்னரே தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பில் பங்கெடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

No comments