நோர்வேயிலிருந்து புறப்பட்டது நீதிக்கான கண்காட்சி ஊர்த்திப் பயணம்


ஜ.நா நோக்கிய நீதிக்கான கண்காட்சி ஊர்திப்பயணத்தின் முதலாவது கண்காட்சியும் பரப்புரை இன்று ஞாயிற்றுக்கிழமை (09.09.2018) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஆரம்பமாகியது. பிற்பகல் 3 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வானது மாலை 6 மணிவரை நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சிப் பரப்புரைக்கான ஊர்திப்பயணம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலிருந்து ஜெனீவா நோக்கிப் புறப்பட்டுள்ளது. குறித்த பயணத்தை  எழுச்சியோடு வழியனுப்பி வைத்தனர் நோர்வேத் தமிழ் உணர்வாளர்கள்.

நீதிக்கான கண்காட்சி ஊர்திப்பயணமானது சுவீடன், டென்மார்க், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, என ஐரோப்பிய நாடுகளை ஊடறுத்து  சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் முன்பாக நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வு வரை செல்லவுள்ளது.

#Norway #Oslo #Norwegian Tamil #TCC Norway #Propaganda Van

No comments