விஜயகலாவிற்கு எதிராக வழக்கு:சட்டமா அதிபர் ஆலோசனை?


விடுதலைப்புலிகளை மீள எழுச்சியடைய வைக்கவேண்டுமென உரையாற்றிய அரச முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக, குற்றவியல் சட்டத்தின் 120ஆவது கீழ் நடவடிக்கை எடுத்து, வழக்கு தாக்கல் செய்யுமாறு,  சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச அமைச்சர்கள் பங்கெடுத்த கூட்டமொன்றில் வடக்கில் சட்டமொழுங்கு மோசமடைந்துள்ளதாக தெரிவித்து அதனை சீராக்க விடுதலைப்புலிகள் மீளெழுச்சியடைய வைக்கவேண்டுமென விஜயகலா ஆற்றிய உரை சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

அவரிற்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அமைச்சு பதவியும் பறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக, குற்றவியல் சட்டத்தின் 120ஆவது கீழ் நடவடிக்கை எடுத்து, வழக்கு தாக்கல் செய்யுமாறு,  சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

No comments