நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:பின்வாங்க கூட்டமைப்பு தயாராகிறது?

முதலமைச்சரிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டால் அவர் மீது எழுப்போகும் பரிதாப அலை தொடர்பில் கூட்டமைப்பு கவனம் கொண்டுள்ளது.அதனால் சுமந்திரன் ஆகக்குறைந்தது இருநாள் அமைச்சர் பதவியை டெனீஸ்வரனிற்கு வழங்க கோரும் சமரசத்தை முதலமைச்சரிடம் விடுத்திருந்தார்.எனினும் அதனை முதலமைச்சர் நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் வடமாகாணசபை குழப்பங்களின் ஒட்டுமொத்த மையமாக உள்ள அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மீண்டும் கீத உபதேசங்களுடன் அடுத்த சமர முயற்சிக்கு தயாராகியுள்ளார்.

மாகாண அமைச்சர்சபை இழுபறிகள் குறித்து தீர்வினை காண்பதற்காக முன்னர் ஒருதடவை முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். ஆயினும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில் நேற்று; நடைபெற்ற வடமாகாணசபையின் 131வது அமர்வில் சில யோசனைகளை முன்வைத்துள்ளேன். அதில் குறிப்பாக முதல மைச்சர் தனது அமைச்சர் சபையை கலைத்து விட்டு புதிய அமைச்சர் சபையை உடனடியாக தேர்வு செய்யலாம். அது யாருக்கும் வெற்றியும் இல்லை, யாருக்கும் தோல்வியும் இல்லை. 

என்ற நிலைப்பாட்டின் படியான தீர்வாக அமையும் எனவும் கூறியுள்ளேன். என்னுடைய இந்த இரு முயற்சிகளுக்கும் இடையில் பல படிப்பினைகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே முதல் எடுத்திருந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக அடுத்தகட்ட முயற்சியை கைவிடுவதை நான் விரும்பவில்லை. இந்நிலையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளேன். 

மேலும் இன்று வடமாகாணசபை இருக்கும் நிலையில் தமிழர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரிய hது. தங்களை தாங்களே ஆழும் வல்லமை கிடையாது. என பல்வேறு அவப் பெயர்கள் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. 
அமைச்சர்கள் குறித்த சர்ச்சை இன்று நேற்றல்ல ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது. 

குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் அமைச்சு பதவிகளை கேட்டபோதே இந்த பிரச்சினை உருவாகிவிட்டது. அதன் தொடர்ச்சியே இன்றுள்ள பிரச்சினை. 

உண்மையில் 5 மாவட்டங்களுக்கும் 5 அமைச்சர்களை அன்றிருந்த நிலையில் முதலமைச்ச ராலும், கட்சியாலும் வழங்கியிருக்க முடியாது. கார ணம் மாவட்டங்கள் 5 ஆக இருந்தது. கட்சிகள் 4 ஆக இருந்தது. 

ஆகவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமையும், தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறும் கட்சிகளின் தலமைகளும் சரியாக அல்லது எதார்த்தத்தை உணர்ந்து செயற்பட்டிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது. 

இன்று கட்சி தலைமைகள் தலையிட்டு பிரச்சினையை தீர்க்கும் கட்டத்தை தாண்டி இந்த பிரச்சினை சென்றிருக்கிறது. மேலும் முதலமைச்சரை சிலர் தங்களுடைய சுயநலன்களுக்காக பயன்படுத்துகிறார்கள். 

சிலர் தங்கள் சுயநலன்களுக்காக அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனையும் வெளிப்படையாக கூறிய ஒருவன் வடமாகாணசபையில் நான் மட்டுமே. அந்தவகையில் அமைச்சர் சபை விவகாரத்தை 18ம் திகதிக்கு முன்னர் தீர்க்கவேண்டும்.

காரணம் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு 18ம் திகதிக்கு பின்னர் அது நீதிமன்றத்தின் வழ க்காக மாறவுள்ளது. ஆகவே முதலமைச்சர், நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றுக்கு செல்லக்கூடாது 
என்பதற்காக என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் நிச்சயமாக எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

எனினும் முதலமைச்சரினை பொறுத்தவரையில் நீதிமன்றில் அவமதிப்பு வழக்கினை எதிர்கொள்ளும் மனநிலையில் உறுதியுடன் இருக்கின்றார்.அவர் குறித்த வழக்கில் தண்டிக்கப்பட்டால் அது மக்களிடையே அவர் தொடர்பில் மிகப்பெரும் அதிர்வலைகளை தோற்றுவிக்கும்.

குறிப்பாக அவரிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஏற்பட்டது போன்ற மக்கள் எழுச்சியேற்படுமிடத்து அது மோசமான பின்விளைவுகளை தோற்றுவிக்குமென சந்தேகிக்கப்படுகின்றது.

இதனால் தம்மால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விலக்கிக்கொள்ள முதலமைச்சத் எதிர்தரப்பு முற்பட்டுள்ளது.அதற்கு முன்னதாக முதலமைச்சரிற்கு அரசியல் ரீதியாக பின்விளைவை தரக்கூடிய நகர்வை முன்னெடுக்கவே சுமந்திரன் முதல் சீ.வீ.கே.சிவஞானம் வரை இறங்கிவர முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments