வெலிக்கடை சிறைச்சாலையில் கூரை மீது ஏறிப் பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்!!

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் கூரைமீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தடுத்துவைக்கப்பட்டுள்ள  கைதிகளில் 10 பெண் கைதிகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சிறைச்சாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரிய இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments