தண்ணீர் தட்டுப்பாடு! பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மக்கள் கோரிக்கை!

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  குஞ்­சுக்­கு­ளம் பகு­தி­யில் மழை இல்­லா­த­ காரணத்தால் கடும் வறட்சி ஏற்­பட்­டுள்­ளது.

இதனால் குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால்  குறித்த பிரச்சினையை  தீர்த்து வைக்குமாறு குஞ்சுக்குளம் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ஆங்­காங்கே காணப்­ப­டும் சிறு குளங்­கள் வற்­றி­ விட்­ட­த­னால் கிணத்­தடி தண்­ணீர் ஊற்­றுக்­க­ளில் தண்­ணீர் சுரப்­ப­தில்லை. எடுக்­கப்­ப­டும் தண்ணீரில் அதிக கல்­சி­யப்­ப­டி­வு­கள் காணப்­ப­டு­வ­தால் சிறு­நீ­ரக நோய்கள் ஏற்­ப டும் அபா­யத்தை குஞ்­சுக்­கு­ளம் மக்­கள் எதிர்நோக்கியுள்­ள­னர்.

எனவே உரிய அதி­கா­ரி­கள் விரை­வாக செயற்­பட்டு தண்ணீர்த்­தாங்­கி­கள் மூலம் சுத்­த­மான குடி­நீர் தந்து குஞ்­சுக்­கு­ளம் மக்­க­ளின் குடி­ தண்­ணீர்ப் பிரச்­ச­னையை தீர்த்து வைக்­கு­மாறு  அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதியிடம் வினவிய போது,,

குடி­ தண்­ணீர்ப் பிரச்­ச­னை­யா­னது மன்­னார் மாவட்­டத்­தில் அனைத்­துக் கிரா­மங்­க­ளி­லும் உள்­ளது.

அந்த வகை­யில் நானாட்­டான் பிர­தேச சபைக்கு உட்­பட்ட கிராமங்களுக்கு தண்ணீர்த்­தாங்­கிகள் மூலம் குடி தண்­ணீர் விநி­யோ­கம் செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம்.

கிட்­டத்­தட்ட அனைத்து கிரா­மங்­க­ளும் தண்­ணீர் பிரச்­ச­னையை சந்தித்துள்­ளமையால் தண்ணீர்த்­தாங்­கி­கள் பற்­றாக்­கு­றை­யாக உள்­ளது.

எதிர்­வ­ரும் சனிக்­கி­ழமை சபை­யின் சிறப்பு அமர்­வில் கலந்­து­ரை­யா­டிய பின் குஞ்­சுக்­கு­ளம் மற்­றும் நானாட்டான் பிர­தேச சபைக்கு உட்­பட்ட கிரா­மங்­க­ளின் தண்­ணீர் பிரச்­சனை தீர்க்­கப்­ப­டும் என்று அவர் தெரிவித்தார்.

No comments