ஒட்டுசுட்டான் கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருள்கள் ஒட்டுசுட்டானில் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் முன்னாள் போராளி உள்பட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி இந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 7பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 20ஆம் திகதி, கிளிநொச்சி சாந்தபுரம் மற்றும் மல்லாவியைச் சேர்ந்த இருவர் கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் ரி.பரஞ்சோதியின் இல்லத்தில் முற்படுத்தப்பட்டனர். இவர்களை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்டபோது கிளைமோர் உள்பட வெடிபொருள்கள் மற்றும் புலிகளின் சீருடைகள் என்பன முச்சக்கர வண்டியிலிருந்து மீட்கப்பட்டிருந்தன. பொலிஸாரின் சுற்றுக் காவல் நடவடிக்கையின்போது இவை கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவத்தில் இருவர் தப்பியோடியிருந்த நிலையில் அவர்களும் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தனர். இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் வழங்குபவர் ஒருவரும் இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அவர்களின் அலைபேசிக்கு வந்த அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கு அமைவாக கிளிநொச்சி சாந்தபுரம் 8ஆம் வாய்க்காலைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை கடந்த 20ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மல்லாவியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி இந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 7பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 20ஆம் திகதி, கிளிநொச்சி சாந்தபுரம் மற்றும் மல்லாவியைச் சேர்ந்த இருவர் கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் ரி.பரஞ்சோதியின் இல்லத்தில் முற்படுத்தப்பட்டனர். இவர்களை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்டபோது கிளைமோர் உள்பட வெடிபொருள்கள் மற்றும் புலிகளின் சீருடைகள் என்பன முச்சக்கர வண்டியிலிருந்து மீட்கப்பட்டிருந்தன. பொலிஸாரின் சுற்றுக் காவல் நடவடிக்கையின்போது இவை கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவத்தில் இருவர் தப்பியோடியிருந்த நிலையில் அவர்களும் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தனர். இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் வழங்குபவர் ஒருவரும் இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அவர்களின் அலைபேசிக்கு வந்த அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கு அமைவாக கிளிநொச்சி சாந்தபுரம் 8ஆம் வாய்க்காலைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை கடந்த 20ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மல்லாவியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment