54 தடவையாக அகழப்படும் மன்னார் புதைகுழி!

மன்னார் சதோச வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்றுடன் 54 வது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது

கடந்த 10 திகதி வெள்ளிகிழமை தொடக்கம் கடந்த 19 ஞாயிற்று கிழமை வரை குறித்த வளாகத்தின் அகழ்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றும் இன்றும் வளமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும்  தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இதுவரை குறித்த வளாகத்தில் 72 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 66 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு 440 பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதி மன்ற  பாதுகப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments