45 வருடமாக நிரந்தரக்கட்டிடம் இன்று இயங்கி வரும் பாண்டிருப்பு உப தபால் நிலையம்!

மட்டக்களப்பு, பாண்டிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள உப தாபல் நிலையத்தை நிரந்தர கட்டிடத்திற்கு மாற்றித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாண்டிருப்பில் கடந்த 45 வருட காலமாக உபதபால் நிலையம் இயங்கிவருகின்றது. இதற்கு ஒரு நிரந்தரக் கட்டிடம்  இன்று வரை இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் குறித் தபால் நிலையம் பல்வேறு இடங்களிலும் வாடகை கட்டிடத்திலே இயங்கிவருகின்றது. 2500 இற்கும் மேற்பட்ட
குடும்பங்களுக்கு தபால் சேவையினை வழங்கிவரும் இந் நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் எதுவும் மற்ற நிலையிலுள்ளது.

கடிதங்களை பத்திரப்படுத்தி வைப்பதற்கான அலுமாரிகள் இங்கு முதியோர் கொடுப்பனவு பெறவருகின்றவர்கள் அமர்வதற்கான கதிரைகள், தொலைநகல், மின்னஞ்சல் வசதிகள் என எதுவித வசதிகளுமற்ற நிலையிலே பாண்டிருப்பு உபதபால் நிலையம் கடந்த 45 வருடங்களாக இயங்கிவருகின்றது.


இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்டாதுள்ளது. பாண்டிருப்பு உபதபால் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கு இங்குள்ள மேட்டைவட்டை வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளம் பகுதியில் சிறியதொரு காணியினைப் பெற்று நிரந்தரக்கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments