எதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்!

பண்டாரவன்னியன் முதல் எல்லாளன் வரை தமிழ் மன்னர்கள் எதிரிகளுடன் வாள் ஏந்தி போராடி எதிரிகளை வென்றார்கள்.ஆனால் இன்று எமது இளைஞர்கள் சக உறவுகளை ஏந்த வாளேந்துகின்றார்களென தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மத்திய குழு அங்கத்தவரும் வடமாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் 2015 இற்கும் முன்னர் யாழ்ப்பாணத்தில் இல்லாத வாள் ஏந்திய குழு தற்போது எங்கிருந்து வந்துள்ளதென கேள்வி எழுப்பினார்.

உலகில் பலம் வாய்ந்த போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளை வென்றுவிட்டதாக இலங்கையின் முப்படைகளும் வீரம் பேசி வருகின்றன.ஆனால் அவர்களால் எமது வாள் வெட்டுக்குழுக்களை பிடிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாதுள்ளது. 

இலங்கை காவல்துறை பிடித்துக்கொடுக்கின்ற வாள் வெட்டுக்குழுக்களை உடனுக்குடன் விடுவித்து விடுவதில் மும்முரமாக இருக்கின்றது.

மருதங்கேணியில் வாள்களுடன் கைதானவர்களை கொடிகாமம் காவல்துறை விடுவித்திருக்கிறது.யாழ்.நகரில் பகிரங்கமாக இரவு வாள்களுடன் சென்ற கும்பல் கடை கடையாக கொள்ளையடித்துள்ளது.இவற்றினை தடுக்க குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையால் முடியாதிருக்கின்றது.

ஏதோ ஒரு உள்நோக்கத்துடனேயே வாள் வெட்டுக்குழுக்கள் கட்;டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். 

No comments